‘அயலகத் தமிழர் நல வாரியம்’
அந்த வகையில் ‘அயலகத் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்பட்டுள்ளது. 18 முதல் 55 வயது வரை உள்ள அயலக தமிழர்கள், வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டை பெறலாம். அயலகத் தமிழர் நலத்துறையின் வலைதளத்தில் (https://nrtamils.tn.gov.in) ஒரு முறை பதிவு கட்டணமாக ரூ.200/- செலுத்தி உறுப்பினராக இணைந்து அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளலாம்.
அந்த வகையில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வேலை செய்பவர்கள், கல்வி பயில செல்பவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். இந்தியாவின் பிற மாநிலங்களில் (தமிழ்நாட்டிற்கு வெளியே) ஆறு மாதங்களுக்கு மேல் வசிக்கும் தமிழர்கள் இப்பிரிவில் உறுப்பினராக தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.