இந்நிலையில் கட்சியின் தலைவர் விஜய்யிடம் அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக விஜய்யிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “பரப்புரைக்கு அறிவிக்கப்பட்டிருந்த நேரம் என்ன?
தாமதமாக வந்ததற்கான காரணம் என்ன?
கூட்டம் அதிகமிருக்கிறது. தள்ளுமுள்ளு உருவாகியிருக்கிறது. தண்ணீர் வசதி இல்லை. இதுபோன்ற விவரங்கள் உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?
அப்படி தெரிந்திருந்தும் நீங்கள் பேச்சைத் தொடர்ந்தீர்களா?
கூட்ட நெரிசல் உருவானதும் உங்கள் பேரணியை நிறுத்தியிருக்கலாமே? எதற்காக நிறுத்தவில்லை?
பேருந்து மீது நின்றிருந்த உங்களுக்கு எதுவும் தெரியவில்லையா? நெரிசலை எப்போது உணர்ந்தீர்கள்? உள்ளிட்ட பல அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.