அங்கு விஜய் உரையாற்ற தொடங்கியபோது, அவரது மைக்கில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. பேச்சை கேட்க முடியாததால் மக்கள் முன்னோக்கி தள்ளியதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. சிக்கியிருந்தவர்கள் மூச்சுத் திணறி மயங்கி விழுந்தனர். மேலும் அருகிலிருந்து மரக்கிளையும் உடைந்து விழுந்ததால் பலர் காயமடைந்தனர். நிலைமை மோசமான நிலையில் இருந்தும், உரை முடிந்த பின் தான் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாகத் தொடங்கின.