எனவே, நகைக்கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய உத்தரவுகளை ரத்து செய்யக்கோரியும், அனைத்து தங்க நகைகளையும் அடமானம் வைப்பதற்கும், வட்டியை மட்டும் கட்டி நகைக் கடனை புதுப்பித்துக் கொள்ளும் முறையை அமல்படுத்தக் கோரியும்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரும் 31ம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை பாரீஸில் உள்ள இந்தியன் ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பு மாபெரும் முற்றுகை போராட்டத்தை முன்னெடுக்கிறது.
எனவே, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கும் இந்த அறவழிப் போராட்டத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். அதேபோன்று, ஜனநாயக அமைப்புகள், அரசியல் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் பங்கேற்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அழைப்பு விடுப்பதாக தெரிவித்துள்ளார்.