தமிழ்நாட்டில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் அதிகமாக இருந்தாலும், அது கல்வி தனியார்மயமாவதற்கும் வழிவகுத்துள்ளது.
மத்திய அரசின் 2020-2021-ம் ஆண்டுக்கான உயர் கல்வி சர்வே அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள கல்லூரிகளில் சுமார் 16% மட்டுமே அரசுக் கல்லூரிகள் ஆகும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகும்.
மாணவர் சேர்க்கையிலும் தனியார் கல்லூரிகளிலேயே அதிக மாணவர்கள் (சுமார் 13 லட்சம்) படிக்கின்றனர். அரசுக் கல்லூரிகளில் வெறும் 4.65 லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் 61 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை தனியார் பல்கலைக்கழகங்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு 26 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு.
இந்த புள்ளிவிவரங்கள், உயர்கல்வி ஏற்கனவே பணம் உள்ளவர்கள் மட்டுமே வாங்கும் பண்டமாகிவிட்டது என்பதையே காட்டுகிறது.