ரேஷன் கார்டு- நலத்திட்ட உதவிகள்
ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மானிய விலையில் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. மாதம் ஒரு முறை வழங்கப்படும் இந்த உணவு பொருட்களால் கோடிக்கணக்கான ஏழை மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் ரேஷன் அட்டை முக்கிய தேவையாக உள்ளது. எனவே ரேஷன் அட்டையை பெற மக்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். மேலும் அரசின் பல்வேறு சலுகைகளை பெறுவதற்கும் ரேஷன் அட்டை தேவையாகும்,