அந்த வகையில் நடப்பாண்டுக்கான முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வரும்30ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில், பசும்பொன்னில் உள்ள நினைவிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள். இதன் காரணமாக எந்த வித சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரத்தில் வருகிற அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.