மேலும் பெண்களுக்கு சம பிரதிநிதித்துவம் மற்றும் உரிமைகளை உறுதி செய்வதன் மூலம் தவெக மற்ற அரசியல் கட்சிகளிலிருந்து வேறுபட்டு நிற்கிறது என்றும், இது எதிர்க் கட்சிகளிடையே பாராட்டையும் பதற்றத்தையும் ஒருசேர உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து விரைவில் அரசியல் சூழலில் மாற்றம் ஏற்படும் என்று கணித்த செங்கோட்டையன், அடுத்த சில மாதங்களில், அதிகாரிகள்கூட தவெக-வின் வளர்ந்து வரும் செல்வாக்கை அங்கீகரிப்பார்கள் என்றார். கட்சித் தொண்டர்கள் தங்கள் சேவைப் பணிகளைத் தொடர வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், கட்சிக்குள் இருக்கும் ஒற்றுமை, தமிழக அரசியலில் தவெகவை வெல்ல முடியாத சக்தியாக மாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.