அநீதி, அராஜகம், தில்லுமுல்லு.. திமுகவுக்காக அப்டேட்டட் திருக்குறளை உருவாக்கிய விஜய்..

Published : Feb 02, 2026, 02:04 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய விஜய் அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு என குறிப்பிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.

PREV
13
அநீதி, அராஜகம் திமுக

தமிழக வெற்றி கழகத்தின் 3ம் ஆண்டு விழா கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றினார். இதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய விஜய், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, நிர்வாக வெளிப்படைத்தன்மை, ஊழல் போன்ற விசயங்களில் ஆளும் கட்சி தோல்வியடைந்துள்ளது. தற்கோது திருவள்ளுவர் மட்டும் இருந்திலுந்தால் திமுகவுக்காக இப்படி ஒரு குறல் எழுதி இருப்பார். அதாவது அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு என எழுதி இருப்பார்.

23
3 ஆண்டுகளில் தமிழகத்தின் மாபெரும் சக்தியாக தவெக

3 ஆண்டுகளில் தமிழக வெற்றி கழகம் மிகப்பெரிய சக்தியாக வளர்ந்திருக்கிறது. இதற்கு காரணம் கோடிக்கணக்கான மக்கள் தான். உங்களை நம்பி தான் நானும், நம் கட்சியும் இருக்கிறோம். அது உங்கள் அனைவருக்கும் தெரியும். 2017க்கு பின்னரும், 2021க்கு பின்னரும் தமிழகத்தின் நிலைமையை மக்கள் யோசித்து பார்க்கின்றனர். காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் இருந்த இடத்தில் இவர்களும் இருக்கிறார்களே என மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

33
மக்களின் கண்ணீரை துடைக்க ஆரம்பக்கப்பட்ட இயக்கம்

தற்போது மக்களின் கண்ணீரைத் துடைக்க ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் தான் தமிழக வெற்றி கழகம். விஜய்க்கு என்ன அனுபவம் இருக்கிறது எனப் பேசுபவர்கள் தான் அன்று எம்ஜிஆரையும் பேசினார்கள். மாபெரும் மக்கள் சக்தியாக நம் தலைமையில் ஒரு அணி, திமு கூட்டணி, பாஜக தலைமையில் மற்றும் பலர். எத்தனை அணிகள் வந்தாலும் திமுகவை வீழ்த்துவதற்கு மாபெரும் சக்தியான தவெகவால் மட்டுமே முடியும். விஜய்யை வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்கள். தேர்தலில் ஒவ்வொரு வீடிலும் இருந்து ஒரு விஜய் வாக்களிப்பார். அன்று விஜய்யை ஏன் அழைத்தோமென வருத்தப்படுவீர்கள்” என்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories