தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தேர்தலுக்கு முன்பாக மக்களை சந்திக்கும் வகையில் தொகுதி, தொகுதியாக அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய் ,
மக்களை சந்திக்கும் வகையில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதன் படி, செப்டம்பர் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருச்சி,. அரியலூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தனது பிரச்சாரத்தை முடித்துள்ள விஜய், அடுத்த கட்டமாக இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை குறிவைத்துள்ளார்.