மக்களை சந்திக்கும் விஜய்
ஏகனாபுரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் திடல் பகுதியில் மக்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்ட காவல்துறை அனுமதி வழங்கப்படாததால் தனியார் மண்டபத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி பரந்தூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மக்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விஜய்க்கு போலீசார் சார்பாக 4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
1. அனுமதிக்கப்பட்ட வாகனங்களில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பரந்தூர் பகுதிக்கு செல்ல வேண்டும்.
2. பரந்தூர், நாகப்பட்டு, நெல்வாய், ஏகனாபுரம், உள்ளிட்ட 9 கிராம மக்களை மட்டுமே சந்திக்க விஜய்க்கு அனுமதி
3. பரந்தூர் மக்களை பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை சந்திக்க அனுமதி
4. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பரந்தூரில் விஜய் இருக்க கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.