இதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான். 50 ஆண்டுகளுக்கு மேலாக இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றனர். இவர்களால் மக்களின் வாழ்க்கைத்தரம் மாறவில்லை. ஏனெனில் எங்கு பார்த்தாலும் ஊழல். ரோடு போடுவதில், கழிவுநீர் கால்வாய் அமைப்பதில், குடிநீர் குழாய் அமைப்பதில், பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டுவதில் என எங்கு பார்த்தாலும் ஊழல் தான்.
விஜய் அரசியலுக்கு வந்த காரணம்
எல்லா ஒப்பந்தங்களிலும் எப்படி கமிஷன் அடிக்கலாம் என்று தான் யோசிக்கிறார்கள். அரசு மருத்துவமனைகளில் கொடுக்கும் மருந்துகள் தரமாக உள்ளதா? நாம் எல்லோரும் சேர்த்து கட்டும் வரிப் பணத்தில் தான் அரசாங்கம் நடக்கிறது.
ஆனால் திட்டங்கள் எதுவும் முறையாக மக்களுக்கு சென்று சேர்வதில்லை. தனக்கு பணம், புகழ் எல்லாம் கொடுத்த மக்களுக்கு திருப்பி செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்'' என்றார்.