ஆனாலும் சி.டி. நிர்மல் குமாரின் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்த அஜிதா ஆக்னஸ், 'ஒன்று விஜய்யை சந்திக்க எனக்கு அனுமதி வேண்டும். இல்லாவிடில் பொதுச்ச்செயலாளர் என்.ஆனந்த் வந்து பேச வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால் விஜய்யும், ஆனந்தும் அவர்களை சந்திக்கவில்லை. இதனால் அஜிதா ஆக்னரும், அவரது ஆதரவாளர்களும் தவெக தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விஜய் பேசமால் நகர மாட்டேன்
''தலைவர் விஜய் வந்து பேச வேண்டும். இல்லையென்றால் இங்கு இருந்து நகர மாட்டேன். என்ன நடந்தாலும் பரவாயில்லை. சாகும் வரை இங்கே தான் இருப்பேன்' என்று அஜிதா ஆக்னஸ் தெரிவித்துள்ளார். பெண் நிர்வாகியின் போராட்டத்தில் தவெக தலைமை அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.