நட்புக்கு இலக்கணம் அண்ணாமலை..! நைனாரை வெறுப்பேற்றும் டிடிவி

Published : Sep 26, 2025, 11:42 AM IST

Annamalai vs Nainar Nagendran leadership : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீது அதிருப்தி தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளனர். அண்ணாமலையின் செயல்பாடுகளை தினகரன் பாராட்டியுள்ளது.

PREV
14

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணியை தக்க வைக்க கட்சிகள் முயன்று வரும் நிலையில், பாஜகவிற்கு ஷாக் கொடுக்கும் வகையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அடுத்தடுத்து பாஜக கூட்டணியில் இருந்து பல்டி அடித்துள்ளனர்.

 இதன் காரணமாக அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு பல முறை நயினார் நாகேந்திரனை தொடர்பு கொண்ட நிலையில், அவர் தனது அழைப்பை எடுக்கவே இல்லையென ஆதாரங்களோடு தனது அதிருப்தியை தெரிவித்தார்.

24

இதனையடுத்து கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன் கூறுகையில், அமமுக என்டிஏவிலிருந்து வெளியேறியதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தான் முக்கிய காரணம் என்று விமர்சித்தார். முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கூட்டணியை சரியாக நிர்வகித்ததாகவும், நயினார் அதை சரியாகக் கையாளவில்லை என்றும் தெரிவித்தார். 

இது "அண்ணாமலை போல் சரியாக கூட்டணி நிர்வகிப்பதில் தோல்வி" என்று தினகரன் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் தனக்கும் - அண்ணாமலைக்கும் இடையே உள்ள நட்பை வெளிப்படையாக கூறி நயினார் நாகேந்திரனை வெறுப்பேற்றியுள்ளார் டிடிவி தினகரன்,

34

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நண்பர் அண்ணாமலை பாஜக மாநில தலைவராக இருந்த போது அவருடைய செயல்பாடு எல்லோரும் பாராட்டத்தக்க வகையில் இருந்தது என்பது உண்மை. 

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எங்களுடன் அரசியலுக்காக பழகினாலும், பழகுவதற்கு நட்புக்கு சிறந்த உதாரணமாக இருந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்ததற்கு முக்கிய காரணமே அண்ணாமலை தான். அண்ணாமலையின் செயல்பாடு மற்றும் தன்மைகள் தான் காரணம்.

44

தற்போது கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம் எங்களை அண்ணாமலை தூண்டி விடுவதாக ஒரு சிலர் தவறான கருத்துகளை பரப்புகிறார்கள். இன்னொருவர் தூண்டி விட வேண்டும் என்றஅவசியமோ ஒருவர் தூண்டிவிட்டு தான் நாங்கள் செயல்பட வேண்டுமென நிலையோ கிடையாது.

அண்ணாமலை மீது கூறப்படுகிற குற்றச்சாட்டிற்கு அவர் பதிலளித்து விட்டார். எனவே இது எல்லாம் கடந்து தனது செயல்பாட்டின் காரணமாக உயர்ந்த நிலைக்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories