இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தால் சிறப்பு வகுப்புகளுக்கு வருகைப் புரிவது கட்டாயமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெறாமல் இருக்க தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உரிய அறிவுரை வழங்க அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தனியார் பள்ளிகள்) அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்த திட்டமிட்ட தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை செக் வைத்துள்ளது.