இந்த நிலையில், அமமுக கூட்டணி தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை என்றும் டிடிவி தினகரன் விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பார் என்றும் அமமுக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் 'கடந்த 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில், கூட்டணி விவகாரத்தில் தமிழகத்தின் நலன் மற்றும் கழகத்தின் நலனை மையமாகக் கொண்டே கூட்டணி அறிவிக்கப்படும் என்பதை டிடிவி தினகரன் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணி விவகாரத்தில் தயக்கம், குழப்பம்
அந்தச் செய்தி அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒளிபரப்பப்பட்டது. இந்தச் சூழலில் சில ஊடகங்கள், கூட்டணி விவகாரத்தில் தயக்கம், குழப்பம், அழுத்தம் என பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதோடு, கடந்த சில தினங்களாக நிகழ்ச்சிகளில் டிடிவி தினகரன் கலந்துகொள்ளவில்லை எனவும் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.