சென்னை - மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை, இந்த தொலைவை நான்கரை மணி நேரத்தில் கடக்கிறது. இந்த நிலையில், சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு அதிவேக ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. அதாவது, இந்த வழித்தடத்தில் அதிவேக ரயில்கள் பயணிப்பதற்காக தனி ரயில் பாதை அமைக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.