ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. 150 கேமராக்கள்.! இனி பொது இடங்களில் குப்பையை கொட்டினால் அவ்வளவுதான்

First Published Jun 6, 2023, 5:16 PM IST

சென்னை மாநகரில் கூவம், அடையாறு கரையோரங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க சென்னை மாநகராட்சி சூப்பரான நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்துள்ளது.

சென்னை மாநகரப் பகுதியில் கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீரை வடியச் செய்வதில் இந்த நீர்வழித் தடங்களின் பங்கு அதிகம். இந்நிலையில், இந்த ஆறுகள் ஆக்கிரமிப்புகளில் சிக்கி, குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளைக் கொட்டுமிடமாக மாறியுள்ளன. ஆறுகளின் அகலமும் குறைந்துவிட்டது.

இதனால் ஆறுகளைப் பாதுகாக்க `சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை' உருவாக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ரூ. 2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் மீட்டெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. கூவம், அடையாறு இவற்றின் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்திருந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அகற்றப்பட்டு, அவற்றில் குடியேறிய குடும்பங்கள், மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தகட்டமாக, ஆறுகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் கொட்டப்பட்ட குப்பை, கட்டுமானக் கழிவுகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து குப்பை கொட்டாத வகையில் சுவர்கள் எழுப்பப்பட்டு, கம்பி வேலிகள் அமைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி ஆணையராக புதிதாகப்பொறுப்பேற்றுள்ள ஜெ. ராதாகிருஷ்ணன், பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.அவர் கூவம், அடையாறு கரையோரங்களில் குப்பை கொட்டப்படுவது தொடர்பாக அவர் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறும்போது, “நீர்வழித் தடங்களைத் தூய்மையாகப் பராமரித்து, அப்பகுதியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல கோடி செலவிடப்பட்டுள்ளது. எனினும், ஆற்றங்கரையில் சிலர் குப்பை கொட்டி, நீர்நிலையையும், சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

இத்தகைய விதிமீறலில் ஈடுபடுவோரைக் கண்டறிய, 150க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களை நிறுவத் திட்டமிட்டுள்ளோம். தேவையான இடங்களிலும் கூடுதலாக கண்காணிப்புக் கேமராக்களை நிறுவவும் முடிவு செய்துள்ளோம். விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். சென்னை மாநகராட்சியின் இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதையும் படிங்க..iPhone 11 வெறும் ரூ.8,950க்கு கிடைக்கிறது! இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது - முழு விபரம் !!

click me!