இந்நிலையில், ஓம் நமச்சிவாயா என்ற உச்சரித்த படியே பக்தியுடன் கிரிவலம் வரும் பக்தர்களிடம் குறிப்பிட்ட சில பகுதிகளில் திருநங்ககைள் குழுக்களாக நின்று இடையூறு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அடாவடி வசூலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. அப்படி காசு கொடுக்காமல் செல்லும் பக்தர்களை திருநங்கைகள் மிரட்டி பணம் பறிப்பதாகவும், பணம் கொடுக்கவில்லையென்றால் தரக்குறைவாக பேசுவதாக புகார் எழுந்தது. குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களை சேர்ந்தவர்களை குறி வைத்தே திருநங்கைகள் இதுபோன்று செய்து வந்தனர். அதேபோல் அண்ணாமலையார் கோவில் வீட்டு வாசலில் இதுபோன்று சம்பவம் நடைபெறுகிறது.