சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு 10.10 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு இயக்கப்படுகிறது. இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், சோளிங்கர், வாலாஜ ரோட், காட்பாடி, சமல்பட்டி, மோரப்பூர், பொம்மிடி, சேலம், திருப்பூர் வழியாக கோவை போத்தனூக்கு வியாழக்கிழமை 7 மணிக்கு சென்றடையும். இதே ரயில் மறுமார்க்கத்தில் இருந்து நவம்பர் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.45 மணிக்கு போத்தனூரிலிருந்து கிளம்பி அன்று மாலை 4.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் 18 பெட்டிகளை கொண்டது. இதில், 16 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், 2 திவ்யாங்ஜன் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.