தக்காளி சட்னிக்கு தடை
தக்காளி விலை உயர்வு காரணமாக கிலோ கணக்கில் தக்காளி வாங்கிய நிலை மாறி எண்ணிக்கையில் தக்காளி வாங்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர். மேலும் வீடுகளில் தக்காளி சாராத உணவு வகைகளையும் சமைக்க தொடங்கினர். ஓட்டல்களில் தக்காளி சட்னி, தக்காளி சாதம், தக்காளி தொக்கு போன்ற உணவுகள் தயாரிப்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து தமிழக அரசு சார்பாக தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் படி தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இருந்த போதும் இந்த திட்டம் முழுமையாக பொதுமக்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் தக்காளியை கூடுதல் விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.