கருத்து கேட்பு கூட்டத்திற்கு எதிர்ப்பு
இந்த நிலையில் கருத்துகேட்பு கூட்டம் நடத்த மாசு கட்டுப்பாட்டுவாரியம் அழைப்பு விடுத்துள்ளது தங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது என பூவுலகின் நண்பர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது ஒரு புறம் இருக்க புதிய துறைமுகத்தால் என்னென்ன சாதக பாதகங்கள் உள்ளது என்பதை பார்க்கலாம். 330 ஏக்கரில் உள்ள அதானி துறைமுகம் 6,111 ஏக்கராக விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 15000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் ,
தமிழகம் ஏற்றுமதியை தூண்டும் தளவாட மையமாகும்..தோராயமாக 53 ஆயிரம் கோடி முதலீடல் இத்திட்டம் செயல்படுத்த உள்ளது. தற்போது 3 பெர்த்களை கொண்டுள்ள துறைமுகம் கூடுதலாக 25 புதிய பெர்த்களை பெறும். தமிழ்நாட்டின் மிகப்பெரிய துறைமுகமாக காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் உருவாகும் .துரைமுகம் விரிவாக்கத்தால் மக்கள் இடப்பெயர்ச்சி இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஆட்டோ மொபைல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து 24.65 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட துறைமுகமாகும் என துறைமுக தரப்பு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது