தமிழகத்தில் வெயில் கொளுத்தியெடுத்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில், கடலோர மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனால் வெயிலில் இருந்து விடுதலை கிடைக்காதா மழை பெய்யுமா என மக்கள் ஏங்கித் தவித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
டெல்டாவில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரை சுமார் 0.9 கிமீ உயரத்தில், கிழக்கு உத்தரப் பிரதேசம் முதல் மன்னார் வளைக்குடா வரை கிழக்கு மத்தியப் பிரதேசம், விதர்பா, தெலுங்கானா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. ஏப்ரல் 18ம் தேதி முதல் ஏப்ரல் 22ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.