கடந்த மே மாதம் தவெக அரசு பொறுப்பேற்றது முதலே, மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 எப்போது அமலுக்கு வரும் என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது. மே மாதத்தில் திட்ட மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக வழக்கமான ரூ.1,000 மட்டுமே பெண்களின் அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில், "ஜூன் 15ஆம் தேதியான இன்று முதல் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.2,500 வரவு வைக்கப்படும்" என்ற ஒரு தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
அரசு வட்டாரங்கள் கூறுவது என்ன?
ஆனால், அரசு வட்டாரங்களிலிருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி, இந்தச் செய்தி முற்றிலும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது. முறைப்படியான அரசாணையோ அல்லது முழுமையான பட்ஜெட் அறிவிப்போ இல்லாமல் தொகையை உடனடியாக உயர்த்த முடியாது என்பதால், வழக்கமான நடைமுறைப்படி இன்று (ஜூன் 15) பயனாளிகளின் கணக்கில் ரூ.1,000 மட்டுமே வரவு வைக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.