ஆகவே இதுபோன்ற தகுதியில்லாதவர்களை மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இருந்து விடுவித்து, தகுதியானவர்களை கூடுதலாக சேர்க்கும் வகையில் கணக்கீடு பணி தொடங்கியுள்ளதாகவும், இந்த பணிகள் முடிந்தவுடன், அரசு கூடுதல் நிதி ஒதுக்கியுடன் மதிப்புமிகு மகளிர் திட்டம் அதாவது மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தவெக அரசு அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
தவெக அமைச்சரவை கூட்டம்
இந்த நிலையில், தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று (ஜூன் 5) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, நிதி நிலைமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தவெக அரசு வாக்குறுதி அளித்த மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500, பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவசம் இன்னும் செயல்படுத்தப்படாததால் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.