துணை வேந்தரைத் தேர்வு செய்வதற்கான குழுவில், வேந்தர் பிரதிநிதியாக உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர், அரசு பிரதிநிதியாக ஒரு கல்வியாளர் அல்லது முதன்மைச் செயலாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவர், மற்றும் சிண்டிகேட் பிரதிநிதியாக ஒரு மாநில அல்லது மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் உள்ளிட்ட கல்வியாளர்கள் இடம் பெறுவார்கள். இக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படும் மூவர் பட்டியலில் இருந்து, துணை வேந்தரை வேந்தர் நியமிப்பார்.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, ஆளுநர் இந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின், இந்த மசோதா சட்டமாக அமலுக்கு வரும்.