திருப்பதிக்கே டஃப் கொடுக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் உண்டியல் காணிக்கை! கோவிந்த கோடிகள்! வியந்த பக்தர்கள்!

Published : Jan 31, 2025, 09:56 AM ISTUpdated : Jan 31, 2025, 10:06 AM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மார்கழி மாத பவுர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. 

PREV
15
திருப்பதிக்கே டஃப் கொடுக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் உண்டியல் காணிக்கை! கோவிந்த கோடிகள்! வியந்த பக்தர்கள்!
திருப்பதிக்கே டஃப் கொடுக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் உண்டியல் காணிக்கை! கோவிந்த கோடிகள்! வியந்த பக்தர்கள்!

உலக புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவில் நினைத்தாலே முக்தி தரக் கூடிய புண்ணிய தலமாக விளங்கக்கூடியது. அது மட்டுமல்லாமல் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்குகிறது. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி அன்று வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். 

25
Tiruvannamalai Annamalaiyar temple

குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை பவுர்ணமி தினத்தில் குவிந்து அண்ணாமலையாரை வழிபட்டு அவரின் அருளை பெற்று செல்கின்றனர். மன குறையுடன் வந்து கிரிவலம் செல்பவர்களின் குறையை நிவர்த்தி செய்வதால் இக்கோவிலுக்கு அலைக்கடலென பக்தர்கள்  திரண்டு வருகின்றனர். இவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் நினைத்த வேண்டுதல் நிறைவேற்றி விட்டால் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துகின்றனர். 

35
Margazhi Pournami

தற்போது மார்கழி மாத பவுர்ணமி நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை முதல் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்று வந்தது. அதில், அண்ணாமலையார் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள இந்திர லிங்கம்,  அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்கத்தில் வைக்கப்பட்ட உண்டியல்கள் என அனைத்து உண்டியல்கள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. 

45
undiyal collection

இந்நிலையில் மார்கழி மாத பவுர்ணமி உண்டியல் காணிக்கையில் ரூ.3.45 கோடி ரொக்கமும், 112 கிராம் தங்கமும், 1.960 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றுள்ளது. மேலும், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது. பின்னர், உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது. 

55
Tiruvannamalai Temple

அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, சமீபகாலமாக உண்டியல் காணிக்கை மாதந்தோறும் 3 கோடியை தாண்டி  வருவது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories