ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத மழை பெய்ததால் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. திருவண்ணாமலை நிலச்சரிவில் உயிரிழப்பும் ஏற்பட்டது.
அதன்பிறகு தமிழ்நாட்டில் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மழை மீண்டும் வெளுத்து வாங்கி வருகிறது. கடலூர். விழுப்புரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் நல்ல மழை பெய்து வெருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.