செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு; சென்னைக்கு வெள்ள அபாயம்; எந்தெந்த பகுதிகள்? முழு விவரம்!

Published : Dec 13, 2024, 09:24 AM ISTUpdated : Dec 13, 2024, 10:45 AM IST

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

PREV
14
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு; சென்னைக்கு வெள்ள அபாயம்; எந்தெந்த பகுதிகள்? முழு விவரம்!
Heavy Rain in Tamilnadu

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் வட கிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத மழை பெய்ததால் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. 

அதன்பிறகு தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் பரவாலாக பெய்த நிலையில், நேற்று முன் தினம் முதல் மழை மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. தென் மாவட்டங்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
 

24
Rain in chennai

நெல்லை நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சென்னை நகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் இடைவிடாது மழை கொட்டியது. 

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் ஆதரமாக திகழும் பூண்டி சத்தியமூர்த்தி ஏரி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிவேகமாக நீர்வரத்து இருந்தது. இதன் காரணமாக நேற்று மதியம் பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 1,000 கன அடி விதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் இந்த நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. 

24 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்! அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு!


 

34
Water released from chembarambakkam Lake

இதனால் சென்னை மணலி, புதுநகர், எண்ணூர் பகுதி கரையோரங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னையின் முக்கியமான குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியிலும் தண்ணீர் கிடுகிடுவென உயர்ந்தது. 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் முழு கொள்ளவை எட்டியதால் இந்த ஏரியில் இருந்து 1,000 கன அடி நீர் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 
 

44
Flood Alert for Chennai

இதன் காரணமாக சைதாப்பேட்டை,  ஈக்காட்டுத்தாங்கல், ராமாபுரம், நந்தம்பாக்கம், திருநீர்மலை, குன்றத்தூர், திருமுடிவாக்கம், மணப்பாக்கம், வழுதியம்பேடு, காவனூர், ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆபத்தான பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

வெளுத்து வாங்கும் கனமழை: “27 மாவட்டங்களில் சம்பவம் இருக்கு” பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


 

Read more Photos on
click me!

Recommended Stories