24 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்! அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு!

Published : Dec 13, 2024, 08:48 AM ISTUpdated : Dec 13, 2024, 11:02 AM IST

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் கனமழையை கொண்டு வந்துள்ளது. இதனால் 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

PREV
14
24 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்! அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு!
Tamilnadu Heavy Rain

இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இதனால் அடுத்த 7 நாட்களில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

24
Heavy Rain

இதன் காரணமான தமிழகத்தில் தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது. 

34
School Holiday

இந்நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தில் தருமபுரி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திண்டுக்கல், மதுரை,  புதுக்கோட்டை, திருப்பூர், ராமநாதபுரம், சிவகங்கை, சேலம், விருதுநகர், தேனி, நாமக்கல், நாகை, கரூர்,  தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி, திருச்சி, விழுப்புரம், நெல்லை, அரியலூர், பெரம்பலூர்  உள்ளிட்ட 21 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

44
Half Yearly Exam Postponed

இதனால் இன்று இந்த மாவட்டங்களில் நடக்க இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories