சிறப்பு தரிசனத்தால் பக்தர்கள் அவதி
இதனையடுத்து கோவிலுக்கு அதிக அளவிலான பக்தர்கள் வருகை தருவார்கள். அப்படி வருகை தரும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் என்ற பெயரில் வி.ஐ.பிக்கள் தரிசனம் செய்ய வருபவர்களால் மேலும் அதிக நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே பக்தர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் நலனுக்காகவும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று (30.03.2025) முதல் புதிய நடைமுறை செயல்பாட்டிற்கு வந்துள்ளது.