நான்கு நாட்களாக ஒரே ரூமில் புருஷன், மனைவி, கள்ளக்காதலன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி! சிக்கிய கடிதம்!

Published : Nov 03, 2025, 03:08 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள விடுதி ஒன்றில், கணவன், மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் என மூவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர். கணவர் தூக்கிட்ட நிலையிலும், மற்ற இருவரும் விஷமருந்திய நிலையிலும் கண்டெடுக்கப்பட்டனர். 

PREV
14
ஜோசப் புதிய விடுதி

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பேராலயத்திற்கு சொந்தமான ஜோசப் புதிய விடுதியில் கடந்த 29 ம் தேதி மாலை திருவாரூர் மாவட்டம் வலங்கைமான விருப்பாச்சிபுரம், பாதிரிபுரத்தைச் சேர்ந்த லோகநாதன், விஜயகுமாரி, கலியபெருமாள் ஆகிய மூவரும் அறை எடுத்து தங்கி உள்ளனர். கலியபெருமாளும், விஜயகுமாரியும் கணவன் மனைவி ஆவர். இந்நிலையில் அவர்கள் தங்கி இருந்த அறையின் ஜன்னலில் துண்டு முடிச்சி போட்டு தொங்கி இருந்ததை கண்ட பக்கத்து அறையில் உள்ளவர் சந்தேகமடைந்து விடுதி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

24
மூன்று பேர் தற்கொலை

இதனைத் தொடர்ந்து அந்த அறையை திறந்து பார்த்த போது துண்டில் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு கலிய பெருமாள் அமர்ந்த நிலையிலும், விஐயகுமாரி கட்டிலிலும், லோகநாதன் தரையிலும் விஷமருந்திய நிலையிலும் உயிரிழந்து கிடந்துள்ளனர். உடனடியாக விடுதி நிர்வாகம் வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூன்று பேரின் உடல்களை மீட்டு ஒரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

34
கள்ளக்காதல்

இதனையடுத்து அவர்கள் தங்கியிருந்த அறையை சோதனை செய்த போது கடிதம் ஒன்று சிக்கியது. அதில் நாங்கள் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எழுதி இருந்ததாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் விஜயகுமாரிக்கும் லோகநாதனுக்கும் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் வீட்டை வீட்டு வெளியேறியுள்ளனர். பின்னர் மனைவியை காணவில்லை என திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அளித்தார். பின்னர் கடந்த 25ம் தேதி தனது மனைவி கிடைத்து விட்டதாக கூறி கொடுத்த புகாரை கலியபெருமாள் வாபஸ் வாங்கியுள்ளார்.

44
கடிதம் சிக்கியது

இந்நிலையில் 29ம் தேதி மூவரும் ஒன்றாக வேளாங்கண்ணியில் அறை எடுத்து தங்கி உள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 4 நாட்களாக ஒன்றாக தங்கி இருந்தவர்கள் தற்கொலை செய்துள்ளனர். லோகநாதன், மனைவி விஜயகுமாரி இருவருக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு கலியபெருமாள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதி அறையில் கணவன், மனைவி, கள்ளகாதலன் மூவரும் ஒரே இடத்தில் தற்கொலை செய்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories