முதலில் 6,244 காலிப்பணியிடங்கள் மட்டும் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து தேர்வர்களின் கோரிக்கையை அடுத்து 3 முறை அதிகரிக்கப்பட்டு மொத்தம் 9,491 காலி பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டன. இந்த தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ம் தேதி வெளியானது. இதனையடுத்து ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வழிமுறைகள் வெளியிடப்பட்டது. மேலும் சான்றிதழ் பதிவேற்றம் நவம்பர் 9 முதல் தொடங்கி 21ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் டிஎன்பிஎஸ்சி டிசம்பர் 21 இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.