அந்த வகையில் வருகிற நவம்பர் 4ஆம் தேதி பொதுத்தேர்வுக்கான தேதி மற்றும் அட்டவணை வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில், நவம்பர் 4ஆம் தேதி, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என தெரிவித்தார்.