தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன.?
தக்காளி விலையானது கடந்த சில வாரங்களாகவே உச்சத்தை தொட்டு வந்தது. ஏழை எளிய மக்கள் வாங்க முடியாமல் திணறும் அளவிற்கு ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு காரணங்களை விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகள் தக்காளியை குப்பை தொட்டியில் கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனால் தக்காளிக்கு உற்பத்தி செய்வதை தவிர்த்து விட்டு மாற்று பயிருக்கு விவசாயிகள் மாறியது தான் தக்காளி வரத்து குறைவுக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் அதிகமான வெப்பம், உரிய காலம் இல்லாமல் தவறி பெய்த மழை உள்ளிட்டவைகள் தான் தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.