முடிவுக்கு வந்தது தமிழகத்தில் மழை.! முழுவதுமாக விடைபெற்றது வடகிழக்கு பருவமழை- வானிலை மையம் அறிவிப்பு

Published : Jan 15, 2024, 09:16 AM IST

வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து விலகியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

PREV
14
முடிவுக்கு வந்தது தமிழகத்தில் மழை.! முழுவதுமாக விடைபெற்றது வடகிழக்கு பருவமழை- வானிலை மையம் அறிவிப்பு
tamilnadu rain

விடை பெற்றது வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை வட மற்றும் தென் மாவட்டங்களை புரட்டிப்போட்டது. வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து மக்களை வாட்டி வதைத்தது. பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களாக வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து நேற்று விலகியதாக தெரிவித்துள்ளது. 

24

வானிலை முன்னறிவிப்பு

14.01.2024, 15.01.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

16.01.2024, 17.01.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

18.01.2024 முதல் 20.01.2024 வரை; தென் தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
 

34
rain

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

44

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

14.01.2024: வடமேற்கு பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தபடுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories