
கடந்த பிப்ரவரி 2024ல் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தளபதி விஜய் வெளியிட்டார். கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய் அரசியல் களத்தில் இறங்கப் போகிறார் என்கின்ற செய்திகள் பரவலாக பரவி வந்தது. இந்த சூழலில் அந்த தகவல்களை உண்மையாகும் வகையில் அதிரடியாக தன்னுடைய கட்சி குறித்த அறிவிப்பை தளபதி விஜய் வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல் திரைப்படங்களில் இனி நடிக்கப் போவதில்லை என்றும், முழு நேர அரசியல் பணியில் ஈடுபட உள்ளதாகவும் அவர் அறிவித்திருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, தளபதி விஜய் தன்னுடைய கட்சி கொடியை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்த போது, கொடி பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டது. இருப்பினும் அந்த நாள் தொடங்கி தளபதி விஜயின் த.வெ.க கட்சி கொடியில் பல சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜயின் த.வெ.க மாநாடு; 70 அடி பிரம்மாண்ட கட்அவுடில் 2 முக்கிய பெண் தலைவர்கள்! வைரல் பிக்ஸ்!
இந்த சூழலில் 2026 ஆம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக தன்னுடைய கட்சியின் சார்பாக தளபதி விஜய் களமிறங்குகிறார். அதற்கு முன்னதாக தன்னுடைய 69 ஆவது மற்றும் இறுதி திரைப்படத்தில் அவர் இப்போது விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த சூழலில் நாளை ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று முடிந்திருக்கின்றது. இரவு நேரங்களில் கண்கவர் விளக்குகளோடு தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு பந்தல் மிளிர்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அது மட்டுமல்லாமல் இந்த மாநாட்டில் பங்கேற்கும் கட்சி தொண்டர்களுக்கு தொடர்ச்சியாக பல கோரிக்கைகளும், கட்டளைகளும் விடுக்கப்பட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இந்த மாநாட்டில் கர்ப்பிணி பெண்கள், நீண்ட காலமாக உடல் நல பிரச்சனை உள்ளவர்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ள கூடாது என்று கட்சி தலைமை அறிவித்திருக்கிறது. மேலும் அவர்கள் வீட்டில் இருந்தபடியே இணைய வழியாக இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியூர்களில் இருந்து இந்த மாநாட்டில் பங்கேற்க வாகனங்களில் வருபவர்கள் கட்டாயம் அந்த வாகனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவிலான நபர்களை மட்டுமே ஏற்றி வர வேண்டும் என்றும். இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்றும் கட்சி தலைமை பல அறிவுரைகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த சூழலில் மேலும் இரண்டு புதிய விதிகள் மாநாட்டிற்கு வருபவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி மாநாட்டிற்கு வரும் வழியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு அருகே மாநாட்டுக்கு வருபவனுடைய வாகனங்கள் நிறுத்தப்படக்கூடாது. அதேபோல மது அருந்திய யாருக்கும் கட்சி மாநாட்டில் அனுமதி கிடையாது. மீறி மது அருந்தி மாநாட்டிற்கு வருபவர்கள் மாநாட்டு பந்தலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை நடிகராக தமிழ் மக்கள் மத்தியில் வலம் வந்த தளபதி விஜய், இப்போது அரசியல் தலைவராக களமிறங்கியுள்ளது பலதரப்பிலிருந்து வரவேற்புகளை பெற்று வந்தாலும் ஒரு சிலர் அவருடைய அரசியல் வருகை குறித்து பெரிய அளவில் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Transport Department: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு பேருந்துல போறீங்களா? அப்படினா இதோ முக்கிய செய்தி!