கடந்த 2018 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் ஒலித்த உரிமையை மீட்போம் என்கின்ற பாடலின் மூலம் பாடலாசிரியராக தமிழ் திரையுலகில் களம் இறங்கியவர் தான் தெருக்குறள் அறிவு. தொடர்ச்சியாக தமிழில் "வடசென்னை", "வந்தா ராஜாவா தான் வருவேன்", "நட்பே துணை", "பட்டாஸ்", "நாடோடிகள் 2" மற்றும் "நான் சிரித்தால்" போன்ற பல திரைப்படங்களில் சிறப்பான பல பாடல்களை இவர் எழுதியிருக்கிறார்.
இந்த சூழலில் தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடலையும் இவர் தான் எழுதியிருக்கிறார். ஏன் என்னை இதற்காக தேர்வு செய்தீர்கள் என்று தளபதி விஜய்யிடம் தான் கேட்டபொழுது "உன்னால் மட்டுமே இதை எழுத முடியும் என்று, தனக்கு ஊக்கம் அளித்ததாகவும்" தனது ட்விட்டர் பக்க பதிவில் கூறி இருக்கிறார் அறிவு.
தலைவர் மாடுலேஷனில் மாநாட்டை தெறிக்க விட்ட தளபதி! விஜய்க்கு இருந்த தைரியம் ஏன் ரஜினிக்கு இல்லை?