டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்கள் விடுமுறை.. ஒரே நாளில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? மெகா சாதனை!

Published : Apr 22, 2026, 10:35 AM IST

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், குடிமகன்கள் முன்கூட்டியே மதுபானங்களை வாங்கிக் குவித்தனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 400 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை.

PREV
15

தமிழகம் முழுவதும் 4829 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகிறது. தினமும் சுமார் 100 கோடிக்கு அளவுக்கு மது விற்பனையாகிறது. வார விடுமுறை மற்றும் தீபாவளி மற்றும் பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் வருமானம் இரட்டிப்பாகும். அரசு இயந்திரமே டாஸ்மாக்கில் வரும் வருமானத்தை வைத்து தான் இயங்குவதாகவே கூறப்படுகிறது.

25

இந்நிலையில் தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குள் மே 4ம் தேதி எண்ணப்படுகின்றன. இதனிடையே தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் முன்கூட்டியே 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

35

அதாவது ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை மொத்தம் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ம் தேதியும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எச்சரிக்கையை மீறி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

45

டாஸ்மாக் 3 நாட்கள் விடுமுறை என்பதை முன்கூட்டியே அறிந்த குடிமகன்கள் மதுபானம் வாங்க போட்டி போட்டுக்கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து கூடுதலாக மதுபாட்டில்களை வாங்கி வைத்து கொண்டனர். அந்த வகையில் நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் மொத்தம் ரூ.300 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் மூன்று நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் மது விற்பனை நடைபெற்றுள்ளது.

55

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ரூ.320 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில் சட்டமன்ற தேர்தலில் ரூ.400 கோடிக்கு மேல் மது விற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories