234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் நேருக்கு நேர் மோத, தவேக மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் தனித்தனி போராட்டத்தில் களமிறங்கியுள்ளன. மே 4ஆம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ளதால், கடைசி கட்ட பிரச்சாரங்கள் தற்போது உச்சத்தை எட்டியுள்ளன. இதற்கிடையில், “ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும்” என்ற எண்ணத்தை மக்களிடம் விதைப்பதற்காக, பூங்கா, பேருந்து நிலையம், கடற்கரை, மால்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.