அனைத்து விசாரணைகளும் நிறைவு பெற்ற நிலையில் நீதிபதி சந்தோஷ் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம்சாற்றப்பட்ட இந்து சன்னி மற்றும் லிண்டோ ஜோசப் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்ட தவறும் பட்சத்தில் மேலும் கூடுதலாக ஒரு மாதம் சிறை தண்டனையும், தடயங்களை மறைத்த குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால், மேலும் ஒரு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் தீர்ப்பளித்தார். தாலி கட்டிய கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.