டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. சம்பள உயர்வுடன் சலுகை.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம்!

Published : Mar 05, 2026, 10:24 AM IST

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வுடன் சலுகைகளை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். 

PREV
15
டாஸ்மாக் கடைகள்

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் அதிகரித்து வரும் நிலையில், மது குடிப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதற்கிடையே டாஸ்மாக் பணியாளர்கள் கடந்த மாதம் 18ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போரட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர்.

25
டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கை

அதாவது 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். டாஸ்மாக்கில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் நடைமுறையில் உள்ள சிக்கல்களை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட இருந்தனர்.

35
தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்புடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.1,000 சம்பள உயர்வும், சில சலுகைகளும் அறிவித்து தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 'தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (TASMAC) பணிபுரியும் பணியாளார்களின் பல்வேறு கோரிக்கைகளை அனைத்து தொழிற்சங்கங்களும் நிர்வாகத்திற்கு வைத்ததின் பேரில் அவர்களுடைய கோரிக்கைகளை பரீசிலனை செய்து கீழ்க்கண்டவாறு அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.

45
டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

டாஸ்மாக் கடைப்பணியாளர்கள் ஏற்கனவே பெறும் ஊதியத்தோடு தற்போது கூடுதலாக ரூ.1000/- உயர்த்தி வழங்கப்படுகிறது. இது ஏப்ரல் 01.04.2026 முதல் அமுலுக்கு வரும். இதன் மூலம் 24,033 கடைப்பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

கடைப்பணியாளர்களுக்கு ESI மருத்துவ மற்றும் சமூகப்பாதுகாப்புக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காலிபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அவுட்சோர்சிங் (Out Sourcing முறையிலோ அல்லது காலிபாட்டில்களை சேகரிப்பு செய்யும் ஒப்பந்ததாரர்கள் மூலமாகவோ செயல்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.

55
மீண்டும் பணி வழங்கப்படும்

கிடங்கு பணியில் உள்ள பணியாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் கடைப்பணி ஒதுக்கீடு செய்யப்படும். தற்காலிக பணிநீக்கம் கடைப்பணியாளர்களுக்கு உள்ள செய்யப்பட்டு வெளியில் குற்றச்சாட்டுகள் தன்மைக்கேற்ப மீண்டும் பணிவழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், பணியாளர்களின் அனைத்து கோரிக்கைகள் தொடர்பாக மேலாண்மை இயக்குநர் (டாஸ்மாக்), பொது மேலாளர் (சில்லறை விநியோகம்), பொது மேலாளர் (நிர்வாகம்), துணைப் பொது மேலாளர் மற்றும் சட்டஅலுவலர் (டாஸ்மாக்) ஆகியோர் ஆய்வு செய்து அறிக்கை துறைக்கு சமர்ப்பிக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories