டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
அடுத்ததாக அமலாக்கத்துறை மானிய கோரிக்கையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதன் படி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் மேற்பார்வையாளர்கள், 14,636 6,567 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள், ஆக மொத்தம் 23,629 மதுபான சில்லறை விற்பனைக் கடைப் பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள்.
தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம் மேற்பார்வையாளர்களுக்கு ரூபாய் 2000, விற்பனையாளர்களுக்கு ரூபாய் 2000, மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூபாய் 2000. 01.04.2025 முதல் மாதந்தோறும் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூபாய் 64.08 கோடி கூடுதல் செலவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.