தமிழகத்தில் வெயிலின் உக்கிரம் இப்போதே ஆரம்பித்து விட்டது. பல்வேறு இடங்களில் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2-3° செல்சியஸ் வரை உயர்ந்து இருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 மாவட்டங்களுக்கு வார்னிங்
அதாவது தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 -3° செல்சியஸ் இயல்பை யல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.