ஆனால் எதிர்பார்த்ததை விட மழை கொஞ்சம் குறைவாகவே இருப்பது அவர்களுக்கு பெரிய ஆறுதலை தந்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது பெய்யும் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து வருகிறது. இந்த முறை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மட்டுமல்லாமல் கோவை, மதுரை, சிவகங்கை போன்ற பகுதிகளிலும் கன மழையும், அவ்வப்போது புயலும் வீசி வருகிறது. இந்த சூழலில் நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதால், அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் அடங்கும் என்றும் அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.