வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு உறைபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் காணப்படும்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 15ம் தேதி தொடங்கியது. அன்று முதல் வெளுத்து வாங்கிய கனமழையால் ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகளின் நீர் மட்டங்கள் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. பின்னர் நம்பவர் மாதத்தில் போதிய மழை பெய்யவில்லை. டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து குடியிருப்புக்குள் புகுந்தது. அதன் பிறகு போதிய மழை பெய்யவில்லை. வறண்ட வானிலை நிலவி வருகிறது.
27
கடும் பனிபொழிவு
மறுபுறம் கடுமையான பனிபொழிவு நிலவி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் அதிகாலை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எறிய விட்டவாரே செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ரயில் மற்றும் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது.
37
இடி, மின்னலுடன் மழை
அதாவது வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இரவு/அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
அதேபோல் நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இரவு/அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகத்தில் டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதி ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இரவு/அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளார்.
57
உறைபனி எச்சரிக்கை
இன்று தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு முதல் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
67
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு / அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
77
அடுத்த 3 மணிநேரம் மழை எச்சரிக்கை
இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.