இலவச பயிற்சி வகுப்பு
இந்தநிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தனியார் பயிற்சி நிலையங்களில் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து படிக்கும் நிலையானது உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக இலவசமாகவே பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில்,
சென்னை மாவட்ட, கிண்டி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள கிராம நிர்வாக அலுவலர். இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த TNPSC-GROUP-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 10-01-2025 முதல் துவங்கப்படவுள்ளது.