நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து நேற்று இரவு 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்னி பேருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், இந்த பேருந்து இன்று காலையில் பாளையங்கோட்டை ஐஆர்டி பாலிடெக்னிக் அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.