அத்துடன் திருச்சி, மதுரை, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஐஸ்கிரீம் உற்பத்தி தொழிற்சாலைகள் செயல்பட்டாலும் அவை போதிய அளவு உற்பத்தி திறனை பூர்த்தி செய்யாத காரணத்தால் தமிழ்நாடு முழுவதும் ஆவின் ஐஸ்கிரீம் வகைகளுக்கு எப்போதும் தட்டுப்பாடு நிலவி கொண்டே இருக்கிறது. எனவே தங்குதடையற்ற ஐஸ்கிரீம் உற்பத்தியை மேற்கொண்டு, தட்டுப்பாடற்ற விநியோகத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும், அடிக்கடி விற்பனை விலை உயர்வு மாற்றம் என்பது நுகர்வோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி, விற்பனையாளர்களுக்கு கடும் சிரமத்தை உருவாக்கும் என்பதாலும், அதே சமயம் நீண்ட காலமாக விற்பனை விலையை மாற்றம் செய்யாமல் இருக்காமலும், ஆண்டுக்கு ஒருமுறை அனைத்து வகையான ஐஸ்கிரீம்களுக்கான விற்பனை விலையை ஒரே சீரான அளவில் உயர்த்தி மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆவின் நிர்வாகத்தையும், தமிழ்நாடு அரசையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.