சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பூங்காவில் கருங்கல் நடைபாதை, செங்கல் நடைபாதை, விளையாட்டு மைதானம், சிறுவர் விளையாட்டுத் திடல், திறந்தவெளி உடற்பயிற்சி மைதானம், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.